
மா. பவளச்செல்வன்
புத்ராஜெயா: ஆக 20-
நாட்டின் 67ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டதிற்கு மக்கள் தேசப்பற்றுடன் திரண்டு வர வேண்டும் என்று
தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபாட்சில் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுதந்திர தினக் கொண்டாட்டம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி டத்தாரான் புத்ராஜெயாவில் நடைபெறுகிறது.
வழக்கம் போல் இவ்வாண்டுக்கான சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக கடந்தாண்டு 1 லட்சம் மக்கள் இக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இவ்வாண்டும் அதற்கும் மேலான மக்கள் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று நேற்று தமது அலுவலகத்தில் தமிழ் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது அவர் இதனை தெரிவித்தார்.

