
சுங்கைபூலோ: செப் 19-
சுங்கைபூலோ நாடாளுமன்ற தொகுதி மக்களின் நலத் திட்டங்களுக்காக 39 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவு துணையமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் தெரிவித்தார்.
சுங்கைபூலோ ஆரோக்கிய முகாம், மடானி கிராம தத்தெடுப்பு திட்டம் பாயா ஜெராஸில் நடைபெற்றபோது அவர் இதனை தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் வசதிகள், அடிப்படை நடவடிக்கைகள் நிறைவடைந்ததை உறுதி செய்வதோடு வறுமையை ஒழிக்க வேண்டும் என்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் இலக்காகும் என்று அவர் சொன்னார்.

