மக்கொத்தா இடைத்தேர்தலில் இந்தியர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் – உரிமை கோரிக்கை!!

ஜோகூர்,செப்25:

ஜோகூர் மக்கொத்தா ( johor Mahkota) இடைத்தேர்தலில் இந்திய வாக்காளர்கள் சிந்தித்து வாக்கு செலுத்த வேண்டும் என்று உரிமைக் கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு கணேசன் கேட்டுக்கொண்டார்.

வரும் செப்டம்பர் 28ஆம் தேதி நடக்க விருக்கும் இடைத்தேர்தலில் நிதானமா யோசித்துப் வாக்கு செலுத்துமாறும் அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

மேலும்,குளுவாங்கில் இந்தியச் சமூகம் எதிர் கொள்ளும் ஆலயம் ,இடுகாடு பிரச்சனைகளை நாம் அனைவரும் நன்கு அறிவோம் என்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் அதனால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்.
துணிச்சலோடு முடிவெடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.

அச்சப்பட்டு அடிமையாக கிடப்பதைவிட ஆபத்தை ஒருமுறையேனும் சந்திப்பது மேலானது என்றுரைத்தார்.

அதுமட்டுமின்றி,
தேர்தல நேரத்தில் நடத்தப்படும். கலைநிகழ்ச்சிகள், கொடுக்கப்படும் சலுகைகள்,இலவசங்கள் எல்லாம் நமக்கு தற்காலிக மகிழ்ச்சியை கொடுக்குமே தவிர அவை நிரந்தர வெற்றியையோ அல்லது தீர்வையோ ஒருபோதும் தந்து விடாது என்றுன் நினைவுறுத்தினார்.

நமக்கு வேண்டியது உரிமை.
உரிமைகளை பெற்று தராத எந்த சலுகையும் நமக்கு பயன் தர போவதில்லை என்பதை வாக்காளர்கள் உணர வேண்டும் எனவும் கேட்டுக் கொண்ட அவர் உங்களை நீங்கள் அரசியல்படுதி கொள்ளுங்கள். அரசியல் தெளிவு பெறுங்கள் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இல்லையென்றால் யாரோ ஒருவரை நம்பி நம்பி ஏமாந்து கொண்டே இருப்போம். உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்,
சிந்தனைக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றார்.

மேலும்,வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடம்,
நம்முடைய சமுதாயம் வீழ்ச்சிக்கு முக்கிய காரனம், அறிவின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதில்லை,
உணர்வின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பதுதான் என்றும் அவர் நினைவுறுத்தினார்.

எனவே, நம்முடைய உணர்வுகளை பயன்படுத்தி அரசியல்வாதிகள் அவர்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
தயவு செய்து விழிப்புணர்வுவோடு இந்த இடைத்தேர்தலில் வாக்கு செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். கேட்டுக்கொண்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles