

கோலாலம்பூர் அக் 12-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலையில் பங்சார் ராமலிங்கேஸ்வர் கோவிலில் 25 பங்சார் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கப்பட்டன.
நினைவில் வாழும் திருமதி.கோடீஸ்வரி 13 ஆம் ஆண்டு நினைவாக,
அறங்காவலர் மலேசியத் தமிழர் சங்கம், பங்சார் கலைமலர் ஸ்டோர் உரிமையாளர்
மற்றும் மூத்த அரசியல்வாதி T. S தங்கவேலு PPN அவர்களும் மற்றும் குடும்பத்தார் சார்பாக இந்த அன்பளிப்புகள் வழங்கப்பட்டது.
அன்பளிப்புகள் பெற்று கொண்ட பங்சார் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.