
மாஸ்கோ:நவ 23-
உக்ரைன் மீதான போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல் அளித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் போர் தொடங்கி 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த போரில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவது தொடர்பான புதிய கொள்கையில் புதின் நேற்று கையெழுத்திட்டுள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையில் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடங்கியது.
இந்த போர் தொடங்கி நேற்றோடு 1,000 நாட்கள் நிறைவடைந்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைனில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன.
நீண்ட தூரம் சென்று இலக்குகளை துல்லியமாக தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது
இது குறித்து ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப எங்களது அணு ஆயுதக் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வருவது முக்கியம்..
அணு ஆயுதங்களை தவிர்ப்பதற்கான வழிகளையே நாங்கள் பார்க்கிறோம். ஆனால், அவற்றை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டால், எங்களுக்கு வேறு வழியில்லை.
நாங்கள் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த நேரிடும் என்று அவர் எச்சரித்தார்.
ராய்ட்டர்