
கோலாலம்பூர் நவ 30-
நாளை நவம்பர் 30* ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயம் மண்டபத்தில் உரிமையின் ஓராண்டு எழுச்சி விழா நடக்கபெறவுள்ளது.
மலேசிய அரசியல் வரலாற்றில் இது ஒரு எழுச்சி நாளாக அமையும் என்று உரிமையின் தேசிய தலைவர் பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி தெரிவித்தார்.
*உரிமைகள் மறுக்கப்பட்ட மலேசியர்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த இந்திய சமுதாயத்தின் சமூக நீதிக்காகவும், சம உரிமைகளுக்காக போராடும் மக்கள் இயக்கமாக உரிமை இன்று உருவாகியுள்ளது.
இந்திய சமுதாயத்தினரோடு அனுக்கமான உறவை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.நாளை நவம்பர் 30 ஆம் தேதி கோலாலம்பூர் அருள் மிகு மாரியம்மன் ஆலயம் மண்டபத்தில் நடக்கவிருக்கும் உரிமையின் ஓராண்டு நிறைவு விழாவில்
மக்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்று அவர் கூறினார்.
உங்கள் வருகையை அன்போடு எதிர் பார்க்கும்
பேராசிரியர் டாக்டர்
ப. இராமசாமி
தலைவர், உரிமை.

