
கோலாலம்பூர் டிச 15-
தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழா நேற்று முன்தினம் மாஸ்ஹா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த விழாவில் சிறந்த முறையில் சேவையாற்றி வந்த பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் மலேசிய தமிழ் கலைஞர்கள், எழை எளிய மக்களுக்கு பல வகைகளில் உதவிகளை வழங்கி வரும் மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்களிடம் இருந்து ரத்னவள்ளி அம்மையார் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

