
பினாங்கு டிச 21-
தாவர விதை தர மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி நாட்டிலிள்ள நூற்றிற்கும் மேற்பட்ட அரசாங்க சார்பில்லா அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
வெளிப்படையான செயல்முறை மற்றும் அனைவருடனும் விரிவான ஆலோசனை இல்லாதது இந்த மசோதா பல சந்தேகங்களை ஏற்படுத்துவதால் இந்த மசோதா நிராகரிக்கப்பட வேண்டும் என அவை கேட்டுகொண்டன.
தாவர விதை தர மசோதா தொடர்பாக ஒழுங்குமுறை தாக்க பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டு
விதைகளை பதப்படுத்தி விநியோகம் செய்யும் ஒவ்வொரு நபரும் உரிமத்திற்காக விண்ணப்பிக்க வேண்டும் என்ற முறை விவசாயிகளை பாதித்துவிடும் என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.
தாவர விதை தர மசோதா மலேசிய தயாரிப்பு மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஒழுங்குமுறை தாக்க பகுப்பாய்வு இல்லாமல் வெளியிடப்பட்டது என்பதை இந்த அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
எனவே, விவசாயிகள் பாதிக்கப்படாமலிருக்க உத்தேச புதிய சட்டத்தின் சரியான தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும்.
சிறு விவசாயிகள் விதைகளை சேமித்தல், பகிர்தல் மற்றும் சிறிய அளவில் விற்பனை செய்தல்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் வேளாண் பல்லுயிர் மற்றும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் முக்கியமானவர்கள்.
புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் போது விவசாயிகள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு உரிமக் கட்டணம் மற்றும் ஆய்வக சோதனைகளுக்கான செலவில் சாத்தியமான அதிகரிப்பு செய்ய வேண்டும்.
இந்த புதிய மசோதா
வேளாண் பல்லுயிரியலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
ஏனெனில் உரிமம் மூலம், அதிக
பிரபலமான அல்லது லாபகரமான வணிக விதைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இது விவசாயிகளின் உரிமைகளுக்கு முரணானது.
எனவே, இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதை நிறுத்துமாறு இந்த அமைப்புகள் அரசாங்கத்தை கடுமையாக வலியுறுத்துகிறது.
ஆகவே தாவர விதை மற்றும் பயிர் தொடர்பான மசோதாவை தாக்கல் செய்வதை நிறுத்திவிட்டு விவசாயிகளுடன் வெளிப்படையான மற்றும் விரிவான ஆலோசனை அமர்வுகளை நடத்த வேண்டும் என நாடுமுழுவதும் உள்ள இந்த அமைப்புகள் கேட்டுக் கொண்டதாக முகைதீன் அப்துல் காதர்
தெரிவித்தார்.

