தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெ.10,000 நிதியுதவி! – இன்று முதல் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப். 7 – கடந்த வாரம் நிகழ்ந்த எரிவாயு குழாய் தீவிபத்தில்
வீடுகள் முற்றாக அழிந்த 81 குடியிருப்பாளர்களுக்கு உடனடி உதவித்
தொகையாக தலா 10,000 வெள்ளி வழங்கப்படும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 வெள்ளி உதவித் தொகையை மத்தியஅரசும் எஞ்சியத் தொகையை பெட்ரோனாஸ் நிறுவனமும் வழங்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இந்த தீவிபத்தில் மேலும் 81 வீடுகள் ஒரு பகுதி சேதமடைந்துள்ள
வேளையில் தீயில் எரியாத, ஆனால் பாதிக்கபட்ட 57 வீடுகளின்
உரிமையாளர்களுக்கு தலா 5,000 வெள்ளி வழங்கப்படும். அந்த வீடுகளில்
வாடகைக்கு இருந்தவர்களும் இதே தொகையை பெறுவர் என்று அவர்
சொன்னார்.

இது உடனடி உதவி நடவடிக்கையாக விளங்குகிறது. பாதிக்கப்பட்ட
அனைத்து 219 குடும்பங்களுக்கும் இன்று தொடங்கி உதவித் தொகை
விநியோகிக்கப்படும்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் நிதியை பகிர்ந்தளிக்க
இயலும் என நம்புகிறோம் என்று அவர் இங்குள்ள அன்னெக்ஸ்
கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles