கோத்தா கெமுனிங்கில் தொடர்கதையாகும் வெள்ளப் பிரச்சனை! விரைந்து நடவடிக்கை எடுக்க பிரகாஷ் கோரிக்கை

ஷா ஆலம், ஏப். 11- கோத்தா கெமுனிங் தொகுதியில் தொடர்கதையாகி
வரும் வெள்ளப் பிரச்சனை குறித்து கடும் அதிருப்தியை வெளியிட்ட
அத்தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சாம்புநாதன்,
இவ்விவகாரத்தில் மாநில மந்திரி புசார் விரைந்து தலையிட்டு உரியத்
தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இத்தொகுதி எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சனை தாமான் ஸ்ரீ மூடாவையும்
தாண்டி அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளுக்கும் பரவியது மிகவும்
கவலையளிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.

இன்று அதிகாலை பெய்த கன மழை காரணமாக கோத்தா கெமுனிங்
தொகுதியில் மீண்டும் வெள்ளம் ஏற்பட்டது குறித்து நான் மிகுந்த
கவலையும் அச்சமும் அடைகிறேன்.

இந்த வெள்ளப் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கக்கூடிய தாமான்
ஸ்ரீ மூடா, தாமான் டேசா கெமுனிங், கம்போங் புக்கிட் லஞ்சோங், புக்கிட்
கெமுனிங், கம்போங் லஞ்சோங் ஜெயா ஆகிய ஐந்து இடங்கள்
பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles