
கோலாலம்பூர்: ஏப்ரல் 25-
நாட்டில் தற்போது பரவலாகப் பயன்படுத்தப்படும் keling -kuil Haram போன்ற இழிவான சொற்களைப் பயன்படுத்துவதை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என்று
கெராக்கான் கட்சியின் தேசியத் தலைவர் டோமினிக் லாவ் ஆணித்தரமாக வலியுறுத்தி உள்ளார்.
நாட்டில் உள்ள இந்தியர்களை சிறுமைப்படுத்துவது போல் தோன்றும் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதை அரசாங்கம் கண்டிப்பாக தடை செய்ய வேண்டும்.
ஒற்றுமையை வலுப்படுத்த உணர்வு, மரியாதை, புரிந்துணர்வு ஆகியவற்றை இப்போது நாம் வலியுறுத்த வேண்டியுள்ளது.
இந்திய சமூகத்தினருக்கான வழிபாட்டுத் தலங்களுடன் தொடர்புடைய Kuil Haram என்ற வார்த்தையை ஒழிக்க வேண்டும் என்றும் கெராக்கான் கட்சி வலியுறுத்துகிறது என்று அவர் சொன்னார்.