
கோலாலம்பூர்: மே 29-
எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்று
கெஅடிலான் உதவித் தலைவர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசியல் ஆதாயத்திற்காக பொறுப்பற்ற தரப்பினர் இதுபோன்ற கீழ் தரமான நடவடிக்கைகளை செய்துள்ளனர்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
மேலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ ஊடக அறிக்கையும் தனது அலுவலகம் மூலமாகவோ அல்லது தனது அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளம் மூலமாகவோ மட்டுமே வெளியிடப்படும்.
அதனால் அவதூறு பரப்ப தீவிரமாக இருக்கும் பொறுப்பற்ற தரப்பினர் செயல்களில் அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சருமான அவர் கேட்டுக் கொண்டார்.

