
தனது 18 மாத ஆண் கைக் குழந்தையை சித்திரவதை செய்ததோடு மூச்சு திணற வைத்து கொலை செய்த குற்றத்திற்காக 20 வயது பெண்மணி மீது இன்று சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
சைபர் ஜெயாவில் உள்ள ஆடம்பர குடியிருப்பில் தனது குழந்தை இறக்கும் வரை சித்தரவதை செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது.
குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்ததால் தூக்கத்தில் இருந்த குழந்தையை மூச்சு திணற செய்து கொலை செய்ய முயன்றதை அந்தப் பெண் விசாரணையில் ஒப்பு கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

