
ஷா ஆலம், ஏப்ரல் 26 – உள்ளூர் மக்களுக்குத் தரமான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், சிலாங்கூர் மாநில அரசு இக்திசாஸ் (IKTISASS) திட்டத்தின் கீழ் தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்விப் பயிற்சியை (TVET) இலவசமாக வழங்குகிறது.
மனிதவள ஆட்சிக்குழு உறுப்பினர் வி.பாப்பாராய்டு கூறுகையில், இத்திட்டம் பள்ளிப்படிப்பை முடித்த இளைஞர்களுக்குத் தொழில்நுட்பம், தளவாடங்கள் மற்றும் உற்பத்தித் துறைகளில் பயிற்சி பெற வாய்ப்பளித்து, அவர்களை நேரடியாகத் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப தயார்படுத்துகிறது என்றார்.
“ஏப்ரல் 11-ஆம் தேதி நடைபெற்ற கோல லங்காட் மாவட்ட வேலைவாய்ப்பு சந்தை போன்ற நிகழ்வுகள், வேலை தேடுவோரை முதலாளிகளுடன் நேரடியாக இணைக்கும் ஒரு தளமாக அமைகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.
“அதே நேரத்தில், சிலாங்கூர் தளமான பிளாட்ஸ் (PLATS), புதிய தொழில்முனைவோருக்குத் தொழில்முனைவுப் பயிற்சிகளை வழங்கி, வணிக நடவடிக்கைகள் மூலம் அவர்களின் வருமானத்தைப் பெருக்கவும் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உதவுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில், மோரிப் சட்டமன்ற உறுப்பினர் ரோஸ்னிசான் அஹ்மத்தின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பாப்பாராய்டு இவ்வாறு தெரிவித்தார்.

