

2023 ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிகள் மார்ச் 20 ஆம் தேதி மீண்டும் அதிகாரப்பூர்வமாக திறக்கப்படும் வேளையில் மாணவர்கள் இப்போது பள்ளி உபகாரணங்களை வாங்குவதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
இந்நிலையில் பத்து காஜா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 600 மாணவர்களுக்கு புத்தகப் பைகளை மனித வள அமைச்சரும் பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ. சிவகுமார் வழங்கி உதவி புரிந்தார்.
மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

