

கோலாலம்பூர் ஆக 19-
தமிழக தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி வியாபாரிகள் மீது பழியை போடாதீர்கள் என்று மிம்தா சங்கத்தின் தலைவர் டத்தோஸ்ரீ பி. கிருஷ்ணமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்தமாக இந்திய உலோகப் பொருள் மறுசுழற்சி வியாபாரிகள் மீது பழியை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் .
நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர் மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி சங்கத்தில் உறுப்பினர் இல்லை.
இவர் மீது போலீசார் சட்ட நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சட்டம் தனது கடமையை செய்யட்டும். ஆகவே யாரும் எங்கள் மீது பழியை போடாதீர்கள்.
இந்திய தொலைக்காட்சிகளில் அதிக அளவில் பகிரப்பட்ட செய்திகள் எங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
எங்கள் சங்கத்தின் உறுப்பினர் யாரும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவில்லை.
மலேசிய இந்தியர் உலோக பொருள் மறுசுழற்சி வியாபாரிகள் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

