தொழிலாளர்களை சித்ரவதை செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை நிச்சயம்! அமைச்சர் சிவகுமார் எச்சரிக்கை

புத்ரா ஜெயா, நவ 16-
இந்த நாட்டில் பணிபுரியும் இந்தோனேசியர்கள் உட்பட வீட்டுப் பணியாளர்களுக்கு எதிராக முதலாளிகள் செய்யும் எந்தவொரு சித்ரவதையும் மனித வள அமைச்சு முடி மறைக்காது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

இந்தோனேசியர்கள் உள்ளிட்ட வீட்டுப் பணியாளர்கள் ஊதியம் பெறாதவர்கள் தொடர்பான புகார்களை அமைச்சு பெற்றுள்ளதாகவும், இந்த விவகாரம் கவனத்தில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கட்டாயத் தொழிலாளர் நடவடிக்கைகளில் இருந்து மலேசியாவை விடுவிப்பதற்காக தொழிலாளர் சட்டத்தை மீறும் எந்தவொரு முதலாளிக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க தொழிலாளர் துறைக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

“இந்த விஷயம் எனக்கும் மனித வள அமைச்சுக்கும ஒரு உத்வேகம் அளிக்கும்.

வெளிநாட்டு தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வழக்குகள் இல்லை என்பதை நாங்கள் மறுக்கவில்லை.

எந்தவொரு தொழிலாளிக்கும் எதிராக பாகுபாடு காட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யும் முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles