

கோலாலம்பூர் நவ 30-
மலேசியாவுக்கு நான்கு நாள் அதிகாரப்பூர்வ வருகையை மேற்கொண்டிருந்த மொனோக்கோ இளவரசர் ஆல்பர்ட் இன்று மாலையில் சிங்கப்பூர் புறப்பட்டார்.
சிப்பாங் klia அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து நாடு திரும்பிய இளவரசர் ஆல்பர்ட்டை மனிதவள அமைச்சர் வ சிவகுமார் வழி அனுப்பி வைத்தார்.
இவரின் வருகையால் மலேசிய மற்றும் மொனோக்கோ இடையிலான இருவழி உறவுகள் மேலும் வலுப்படுத்தி உள்ளது.

