
அம்பாங், பிப் 13-
அம்பாங்கில் உள்ள மலேசியா ஸ்ரீ ஆதிசங்கர திருமடத்தில் நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு இந்து சமய வகுப்பு நடைபெறுகிறது.
ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் ஸ்தாபகர் சுவாமி மகேந்திர தலைமையில் நடைபெறும் இந்த வகுப்பில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மாணவர்கள் நான்கு நாள் திருமடத்தில் தங்கி இந்து சமய கல்வியை முறையாக கற்று கொள்வார்கள்.
கடந்த 23 வருடமாக மலேசியா ஸ்ரீ ஆதிசங்கர திருமடம் இந்த சமய முகமை நடத்தி வருகிறது என்று திருமடத்தின் துனை தலைவர் .டாக்டர்.இரா.பெரமகண்னன் தெரிவித்தார்.

